இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சீரியல்களில் வில்லியாக பல வருடங்களாக கலக்கி வருகிறார் கவுதமி வேம்புநாதன். இவர் அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சீரியலில் வில்லியாக நடிப்பதால் நிஜ வாழ்வில் தன் மகனின் திருமண வாழ்க்கைக்கே பிரச்னை வந்ததாக கூறியுள்ளார். கிட்டதட்ட 18 வருடங்களாக பல்வேறு சீரியல்களில் நடித்துள்ள கவுதமி வேம்புநாதன் வில்லி மற்றும் காமெடி ரோல்களில் நடித்து வருகிறார். கவுதமி வில்லியாக நடிப்பதை பார்த்து பலர் இவருடன் பேசவே பயப்படுவார்களாம்.
அதிலும் அவருடைய சொந்த மகனே 'அம்மா நீ இப்படி நடிப்பதால் எனக்கு திருமணம் ஆகாதோன்னு தோனுது' என்று சொல்லியிருக்கிறார். அதுபோலவே ஒரு பெண் வீட்டில் கவுதமியின் குடும்ப புகைப்படத்தை பார்த்து ‛இந்தம்மா பெரிய வில்லியாச்சே' என பயந்து இருக்கிறார்களாம். இந்த சம்பவத்தை நேர்காணலில் மிகவும் ஜாலியாக பகிர்ந்து கொண்ட கவுதமி வேம்புநாதன் நிஜ வாழ்வில் உண்மையாகவே பழகுவதற்கு மிகவும் இனிமையானவராம்.