திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
சீரியல்களில் வில்லியாக பல வருடங்களாக கலக்கி வருகிறார் கவுதமி வேம்புநாதன். இவர் அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சீரியலில் வில்லியாக நடிப்பதால் நிஜ வாழ்வில் தன் மகனின் திருமண வாழ்க்கைக்கே பிரச்னை வந்ததாக கூறியுள்ளார். கிட்டதட்ட 18 வருடங்களாக பல்வேறு சீரியல்களில் நடித்துள்ள கவுதமி வேம்புநாதன் வில்லி மற்றும் காமெடி ரோல்களில் நடித்து வருகிறார். கவுதமி வில்லியாக நடிப்பதை பார்த்து பலர் இவருடன் பேசவே பயப்படுவார்களாம்.
அதிலும் அவருடைய சொந்த மகனே 'அம்மா நீ இப்படி நடிப்பதால் எனக்கு திருமணம் ஆகாதோன்னு தோனுது' என்று சொல்லியிருக்கிறார். அதுபோலவே ஒரு பெண் வீட்டில் கவுதமியின் குடும்ப புகைப்படத்தை பார்த்து ‛இந்தம்மா பெரிய வில்லியாச்சே' என பயந்து இருக்கிறார்களாம். இந்த சம்பவத்தை நேர்காணலில் மிகவும் ஜாலியாக பகிர்ந்து கொண்ட கவுதமி வேம்புநாதன் நிஜ வாழ்வில் உண்மையாகவே பழகுவதற்கு மிகவும் இனிமையானவராம்.