திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் பாலா. சமீப காலமாக திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வரும் பாலா, இன்னொரு பக்கம் சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக, ஏழை குழந்தைகளை படிக்க வைப்பது, முதியோர் இல்லங்களுக்கு உதவுவது, மலைக்கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுப்பது என்று பலதரப்பட்ட உதவிகளை செய்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், மருத்துவமனை கட்டி அதில் ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதுதான் எனது நீண்ட நாள் கனவு என்று கூறி இருக்கிறார் பாலா. அதோடு, நான் படிக்க வைக்கும் ஒரு மாணவன் தற்போது இன்ஜினியரிங் படித்து வருகிறார். அவர் அடுத்த ஆண்டு படித்து முடித்ததும் மருத்துவமனை கட்டுவதற்கான பணிகளில் ஈடுபடுவேன். குறிப்பாக இதயம் சம்பந்தமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க இந்த மருத்துவமனையை தான் கட்டப் போவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.