தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

விஜய் டிவியில் அதிக எதிர்பார்ப்புடன் தொடங்கபட்ட சீரியல், கிழக்கு வாசல். இதில் எஸ்.ஏ.சந்திரசேகர், வெங்கட், ரேஷ்மா, அருண்குமார் ராஜன், அஸ்வினி என ஒரு நடிகர் பட்டாளமே நடித்து வந்தனர். சீரியலில் திரைக்கதை நன்றாக இருந்தாலும் சரியான டைம் ஸ்லாட் கிடைக்காததால் டிஆர்பியில் முன்னேற்றமில்லாமல் தவித்து வந்தது.
இந்நிலையில் இந்த தொடரை முடித்து வைக்க சீரியல் குழுவினர் முடிவெடுத்துள்ளனர். இதற்காக கிளைமாக்ஸ் காட்சியும் அண்மையில் படமாக்கியுள்ளனர். ஆனால், சீரியலின் கதாநாயகி வராமலேயே அந்த காட்சியை படமாக்கி சீரியலை முடித்து வைத்துள்ளனர். இதுகுறித்து தற்போது பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ரேஷ்மா, ஒரு மாதத்திற்கும் மேலாக தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், எனவே தான் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், இந்த சீரியலில் நடித்த அனுபவத்தை என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.