தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் |
ஜீ தமிழில் சரிகமப நிகழ்ச்சி 4-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் ஸ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ், கிரிஷ், சைந்தவி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு ஸ்பெஷல் ரவுண்டுடன் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில், கடந்த வாரம் டெடிகேஷன் ரவுண்டு நடைபெற்றது. போட்டியாளர்கள் தங்களுக்கு பிடித்தமானவர்களுக்காக ஒரு பாடலை தேர்வு செய்து பாடினார்கள்.
இந்நிலையில்,போட்டியாளர் ஸ்வேதா தனது அப்பாவிற்காக டெடிகேட் செய்து 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்' என்ற பாடலை பாடினார். அப்போது அவர் தனது தந்தைக்காக எழுதியிருந்த கடிதத்தை மேடையில் படித்தார். அந்த கடிதத்தில் 'எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். ஆனால், உங்களுக்கு என்னை பிடிக்குமா? பிடிக்காதா? என்று தெரியவில்லை. எனக்கு உங்களிடமிருந்து முத்தமும் அரவணைப்பும் வேண்டும்' என்று எழுதியிருந்தார்.
இதைபார்த்து உணர்ச்சிவசப்பட்ட ஸ்வேதாவின் தந்தை தன் மகள் தன் பாசத்திற்காக இவ்வளவு ஏங்கி தவிக்கிறாளா? என்று வருத்தப்பட்டு உடனடியாக மேடையிலேயே ஸ்வேதாவின் காலிலேயே விழுந்தார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் பார்ப்பவர்கள் அனைவரையும் கண்கலங்க செய்தது. அதேசமயம் ஸ்வேதாவின் நீண்ட நாள் ஆசையான தந்தையின் முத்தமும் அவருக்கு கிடைத்துவிட்டது.