2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? |
ஜீ தமிழில் சரிகமப நிகழ்ச்சி 4-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் ஸ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ், கிரிஷ், சைந்தவி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு ஸ்பெஷல் ரவுண்டுடன் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில், கடந்த வாரம் டெடிகேஷன் ரவுண்டு நடைபெற்றது. போட்டியாளர்கள் தங்களுக்கு பிடித்தமானவர்களுக்காக ஒரு பாடலை தேர்வு செய்து பாடினார்கள்.
இந்நிலையில்,போட்டியாளர் ஸ்வேதா தனது அப்பாவிற்காக டெடிகேட் செய்து 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்' என்ற பாடலை பாடினார். அப்போது அவர் தனது தந்தைக்காக எழுதியிருந்த கடிதத்தை மேடையில் படித்தார். அந்த கடிதத்தில் 'எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். ஆனால், உங்களுக்கு என்னை பிடிக்குமா? பிடிக்காதா? என்று தெரியவில்லை. எனக்கு உங்களிடமிருந்து முத்தமும் அரவணைப்பும் வேண்டும்' என்று எழுதியிருந்தார்.
இதைபார்த்து உணர்ச்சிவசப்பட்ட ஸ்வேதாவின் தந்தை தன் மகள் தன் பாசத்திற்காக இவ்வளவு ஏங்கி தவிக்கிறாளா? என்று வருத்தப்பட்டு உடனடியாக மேடையிலேயே ஸ்வேதாவின் காலிலேயே விழுந்தார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் பார்ப்பவர்கள் அனைவரையும் கண்கலங்க செய்தது. அதேசமயம் ஸ்வேதாவின் நீண்ட நாள் ஆசையான தந்தையின் முத்தமும் அவருக்கு கிடைத்துவிட்டது.