ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பிரபல சின்னத்திரை நடிகையான ஹரிப்பிரியா நீண்டநாள் இடைவேளைக்கு பிறகு எதிர்நீச்சல் சீரியல் மூலம் கம்பேக் கொடுத்தார். கணவரை விவாகரத்து செய்து மகனுடன் தனித்து வாழ்ந்து வரும் ஹரிப்பிரியாவுக்கு எதிர்நீச்சல் தொடர் மிகப்பெரிய உத்வேகத்தை அளித்தது. இந்நிலையில், அந்த தொடர் அண்மையில் முடிவுக்கு வந்துவிட்டது. இதனையடுத்து ஹரிப்பிரியா என்ன செய்ய போகிறார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் சட்டென பரதநாட்டியத்திற்கான நடனப்பள்ளி ஒன்றை துவங்கியுள்ளார். காளிகல்பா என்ற இவரது நடனப்பள்ளியில் ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் நடனம் சொல்லித்தரப்படும் என அறிவித்துள்ளார். மேலும் நடனப்பள்ளி திறப்பதை தனது நீண்டநாள் கனவு என பதிவிட்டுள்ள ஹரிப்பிரியாவுக்கு ரசிகர்கள், சக நண்பர்கள் என பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.