ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சின்னத்திரை நடிகர் வசந்த் வசி அக்னி நட்சத்திரம், பாரதிதாசன் காலனி, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ஆகிய தொடர்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமாகியுள்ளார். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று போட்டியிட்டு வந்த நிலையில் கடந்த வாரம் எலிமேனேட் ஆகிவிட்டார். இதனையடுத்து ஊடகங்கள் இவரை வட்டமிட்டு பேட்டியெடுத்து வருகின்றனர். அவ்வாறாக அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், 'நான் அடிமட்டத்திலிருந்து ஒவ்வொரு முறையும் போராடி நூலிழையில் தோற்றுவிடுகிறேன். இது என்னுடைய வாழ்வில் பலமுறை நடந்திருக்கிறது. படங்களில் நடிக்க வேண்டும் பல முயற்சிகள் எடுத்திருக்கிறேன்.
வேலையில்லா பட்டதாரி 2வில் நான் தான் பாலாஜி மோகன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. டயலாக் பேப்பரெல்லாம் வாங்கி மனப்பாடம் செய்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் சென்றுவிட்டேன். ஆனால், கடைசி நேரத்தில் சவுந்தர்யா மேடம் என்னை பார்க்க வேண்டும் என்று சொன்னார். நானும் சென்றேன். அவருக்கு நான் சின்ன பையனாக இருப்பதாக தோன்றியிருக்கிறது. என்னை மாற்ற வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அன்று ஷூட்டிங் நடக்கவில்லை. நான் வீட்டிற்கு வந்து அழுதேன். கடைசியில் படம் ரிலீஸான போது பார்த்தால் பாலாஜி மோகன் நான் மனப்பாடம் செய்த அதே டயலாக்கை பேசினார். அதை பார்க்கு போது கஷ்டமாக இருந்தது' என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.