ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
எதிர்நீச்சல் நடிகை ஹரிப்ரியா, அந்த தொடரில் வரும் வில்லனை போல நிஜ வாழ்க்கையில் பெண்களுக்கு ஆயிரம் குணசேகரன்கள் வருவார்கள் என்றும், அவர்களை கண்டு பயந்து ஓடாமல் போராட வேண்டும் என்றும் அறிவுரை செய்துள்ளார்.
சின்னத்திரை நடிகை ஹரிப்ரியா தொலைக்காட்சி சீரியல்கள் நடிப்பதுடன் சிறப்பு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். தற்போது 'எதிர்நீச்சல்' தொடரில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் காமெடி கலந்த நடிப்புடன் பட்டையை கிளப்பி வருகிறார். இதற்கு முன்பே இவர் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் எதிர்நீச்சல் நந்தினி கதாபாத்திரம் இவருக்கு பெரிய புகழை பெற்று தந்துள்ளது. கணவரிடமிருந்து விவாகரத்து பெற்ற ஹரிப்ரியா தற்போது தனது கேரியரில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், 'குணசேகரன் மாதிரி ஒருத்தர் உங்கள் வாழ்க்கையில் இல்லையென்றால் நீங்கள் கண்டிப்பாக ஆசிர்வதிக்கப்பட்டவர். வெளியில் நம்மைச் சுற்றி ஆயிரம் குணசேகரன்களும், கதிர்வேல்களும் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரையும் சமாளித்து தான் ஒவ்வொரு நாளையும் நாம் கடந்து செல்ல வேண்டும். குணசேகரன் போன்றோர்களை பார்த்து பயந்து ஓடக்கூடாது. பாரதியார் சொன்னது போல் ரெளத்திரம் பழக வேண்டும். யாருக்காகவும் நம் உரிமையை விட்டுக்கொடுக்ககூடாது. எதிர்த்து போராட வேண்டும்' என்று அறிவுரை செய்துள்ளார்.