கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது |
கன்னட திரைப்பட நடிகையான சுப ரக்ஷா ‛கார்த்திகை தீபம்' தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். இந்த தொடரில் வில்லியாக மிரட்டி வந்த இவரது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பாராட்டுகளும் கிடைத்து வந்தது. அண்மையில் இலங்கையில் நடைபெற்ற ‛ஆசிய ஐகான் விருது' நிகழ்விலும் சுப ரக்ஷாவுக்கு சிறந்த மாடல் மற்றும் நடிகைக்கான விருது கிடைத்தது.
இந்நிலையில், கார்த்திகை தீபம் தொடரிலிருந்து சுப ரக்ஷா திடீரென விலகினார். அவருக்கு பதிலாக தற்போது சாந்தினி பிரகாஷ் நடித்து வருகிறார். சுப ரக்ஷா எதற்காக சீரியலை விட்டு விலகினார் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்ப, தற்போது அதற்கு பதிலளித்துள்ள சுப ரக்ஷா, 'ரசிகர்களின் அன்பை பெற்றதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தற்போது கன்னடத்தில் படம் ஒன்றில் கமிட்டாகியிருப்பதால் கார்த்திகை தீபம் தொடரிலிருந்து விலகி இருக்கிறேன். விரைவிலேயே புதிய சீரியலில் உங்களை சந்திக்கிறேன்' என்று கூறியுள்ளார்.