தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

சின்னத்திரை நடிகையான திவ்யா கணேஷ் தற்போது பாக்கியலெட்சுமி தொடரில் ஜெனிபர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக விகாஸ் சம்பத் நடித்து வருகிறார். சீரியலில் ஜோடியாக திரியும் இவர்கள் இருவரும் நிஜத்திலும் காதலித்து வருவதாக கடந்த சில நாட்களாக வதந்திகள் பரவி வந்தது. இந்நிலையில், திவ்யா கணேஷ் இது முற்றிலும் பொய்யான செய்தி என்று கூறியதோடு, 'எங்கள் இருவருக்கும் குடும்பங்கள் இருக்கிறது. எங்கள் குடும்பங்களை மனதில் வைத்துக்கொண்டு இவ்வாறான பொய் செய்திகளை பரப்புவதை முதலில் நிறுத்துங்கள். எனது கடந்த கால வாழ்க்கை குறித்தும் பேசாதீர்கள். அதை நான் மறக்கவே நினைக்கிறேன். இதை எனது வேண்டுகோளாக நினைத்து ரீச்சிற்காகவும், வியூஸ்காகவும் இது போன்ற போலியான செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்' என வேண்டுகோள் வைத்துள்ளார்.