துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
கலைஞர் டி.வி.யில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த 'கண்ணெதிரே தோன்றினாள்' தொடர் இன்றுடன் முடிவடைகிறது. இதை தொடர்ந்து வருகிற திங்கள் முதல் (4ம்தேதி) 'பவித்ரா' என்கிற புதிய தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. இரவு 7 மணி முதல் 9 மணி வரை 2 மணிநேரம் சிறப்பு எபிசோட்டுடன் இந்த தொடர் ஆரம்பமாகிறது.
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு சென்ற அனிதா சம்பத் மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பி வந்து நடிக்கும் முதல் தொடர். அவரது ஜோடியாக பாடலாசிரியர் சினேகன் நடிக்கிறார். பிரபல தொழிலதிபர் ரமா தேவிக்கு கிருஷ்ணா, பவானி, ஜோதி ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இதில் கிருஷ்ணா, சரிகாவை மணக்கிறார். சரிகாவின் அண்ணன் வேணுவுக்கு பவானியை மணம் முடித்து கொடுக்க ரமா தேவி விரும்பும் நிலையில், தனது வீட்டாரை எதிர்த்து தான் காதலித்த டிரைவர் பாரதியை, பவானி திருமணம் செய்து கொள்கிறார். அதன்பிறகு குடும்பத்திலும், காதலிலும் என்ன நடக்கிறது. ஜோதியின் நிலை என்ன என்பது தான் தொடரின் கதை.