மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் சீசனுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் ஸ்டாலின் முத்து, நிரோஷா, ராஜ்குமார் மனோகரன், வெங்கட் ரெங்கநாதன், வீஜே கதிர், சரண்யா துராடி, ஷாலினி, ஹேமா ராஜ்குமார் என பெரிய பட்டாளமே நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராஜி என்கிற முக்கிய கதபாத்திரத்தில் நடித்து வரும் ஷாலினி சீரியலை விட்டு விலக இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தது. இதனால் ரசிகர்களும் குழப்பமடைந்தனர்.
இதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ள ஷாலினி, 'நான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரிலிருந்து விலகப்போவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அது முற்றிலும் பொய். எதற்காக இப்படி வதந்திகள் பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை.நான் உங்கள் ராஜியாக தொடர்வேன். வதந்திகளை பரப்பாதீர்கள்' என பதிவிட்டுள்ளார்.