எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் |
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்துவிட்டாலே பல சர்ச்சைகள் வெடித்துவிடும். நிகழ்ச்சியை ரசித்து விமர்சிப்பவர்கள் ஒருபுறம் என்றால், மறுபுறம் பிக்பாஸ் நிகழ்ச்சியை எதிர்த்து கொடி பேனர்களுடன் கூட்டமாக சிலர் போராட சென்று விடுகின்றனர். இது போன்ற போராட்டங்கள் வருடந்தோறும் வாடிக்கையானாலும் இறுதியில் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக அடுத்தடுத்த சீசன்களை கடந்து தான் வருகிறது.
தற்போது பிக்பாஸ் சீசன் 8 ஆரம்பித்து ஒரு மாதம் கடந்து விட்ட நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் கலாசாரத்திற்கு எதிராகவும், கலாசாரத்தை சீரழிக்கும் வகையிலும் இருப்பதாக கூறி மத்திய மாநில அரசுகள் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளனர்.