'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் |

2007ம் ஆண்டு வெளியான 'முருகா' படத்தின் மூலம் அறிமுகமானவர் அசோக். அதன்பிறகு பிடிச்சிருக்கு, கோழிகூவுது, காதல் சொல்ல ஆசை, வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய், கனிகாபுரம் சந்திப்பு, கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் உள்பட பல படங்களில் நடித்தார். தெலுங்கு, மலையாளத்திலும் சில படங்களில் நடித்தார். வானம் பார்த்த சீமையிலே, உலா, பிரியமுடன் பிரியா உள்ளிட்ட சில படங்கள் வெளிவரவில்லை.
சினிமா வாய்ப்புகளும், வெற்றிகளும் சரியாக அமையாத இளம் நடிகர்கள் சின்னத்திரைக்கு வருவது புதிதில்லை. அந்த வரிசையில் தற்போது அசோக்கும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார். ஜீ தமிழ் டி.வி.யில் மதியம் 1 மணிக்கு, 'மவுனம் பேசியதே' என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் அசோக், ஜோவிதா லிவிங்ஸ்டன், இரா அகர்வால், சத்யா உட்பட பலர் நடித்து வருகிறார்கள்.
அவரவர் விருப்பத்துடன் ஒரு ஜோடிக்கும், பரஸ்பர விருப்பமில்லாமல் ஒரு ஜோடிக்கும் என இரு ஜோடிகளுக்கு திருமணம் நடக்கிறது. இவர்கள் ஒரே பேருந்தில் பயணிக்க, பேருந்து விபத்தில் சிக்குகிறது. அதில் இரு ஜோடிகளின் வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரசியங்கள்தான் தொடரின் கதை.
அசோக் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு 'ஸ்ரீகிருஷ்ணா' உள்ளிட்ட சில தொலைக்காட்சி தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.