நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா தொடருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. மிர்ச்சி செந்தில், நித்யா ராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இன்னும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தொடரின் முக்கிய கதாபாத்திரமான வீரா என்கிற வீரலெட்சுமி கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் வீஜே தாரா நடித்தார். இவர் விலக அதன்பிறகு தர்ஷு சுந்தரம் நடித்தார். அவரும் விலகிவிட கவுரி கோபன் என்ட்ரி கொடுத்தார். ஆனால், தற்போது கவுரி கோபனும் அண்ணா தொடரிலிருந்து அதிரடியாக விலகியிருக்கிறார். இப்படி வீரா கதாபாத்திரத்தில் நடித்த மூன்று நடிகைகளுமே அடுத்தடுத்து விலகிவிட்டனர். இதனையடுத்து அந்த கதாபாத்திரத்தில் சுசித்ரா என்ற நடிகை நடிக்கவிருக்கிறார். இவர் எத்தனை நாளைக்கு தாக்குபிடிப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.