இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சின்னத்திரை நடிகையான சாய் காயத்ரி ஈரமான ரோஜாவே, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சில தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். தற்போது சீரியல் நடிப்பதற்கு ப்ரேக் விட்டுள்ள சாய் காயத்ரி, சொந்தமாக அழகு சாதனப்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். சாய் சீக்ரெட்ஸ் என்ற அந்த கம்பெனியில் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்கிறார்கள்.
இந்நிலையில், சாய் காயத்ரி அண்மையில் தனது கம்பெனியில் இருக்கும் ஒரு இயந்திரத்தில் கையை விட்டு விபத்தில் சிக்கியுள்ளார். இதில் அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. எனினும் 2 வாரங்களில் சரியாகிவிடும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து சாய் காயத்ரியின் ரசிகர்கள் சீக்கிரமே அவர் பூரண நலம் பெற வர வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.