ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாக்கியலெட்சுமி சீரியலில் கோபி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் நடிகர் சதீஸ். பலவருடங்களாக திரையில் பயணித்து வரும் இவருக்கு பாக்கியலெட்சுமி தொடர் நல்லதொரு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ரசிகர்களுடன் உரையாடியும், பாக்கியலெட்சுமி சீரியல் குறித்து பல அப்டேட்டுகளையும் கொடுத்து வந்த இவர் ஒரு சில முறை சீரியலை விட்டு விலகுவதாகவும், பாக்கியலெட்சுமி தொடர் முடிவுக்கு வர உள்ளதாகவும் கூறி இருக்கிறார். அப்படியிருக்க, 5 வருடங்களுக்கு மேல் ஹிட்டாகி ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலெட்சுமி தொடர் சமீபகாலங்களில் சற்று சுமாராக சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில், அண்மையில் சதீஷ் வெளியிட்ட வீடியோவில் சீரியலின் முடிவு ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி இருக்கும் என்பது போல் கூறியிருந்தார். இதனையடுத்து சீரியலுக்கு எண்ட் கார்டு என செய்திகள் வெளியானது. ஆனால், தற்போது சதீஷ் மற்றொரு வீடியோவில் தான் சொன்னதை தவறாக மக்கள் புரிந்து கொண்டதாகவும் தற்போதைக்கு சீரியல் முடிய போவதில்லை என்றும் கூறியிருக்கிறார்.
இதைபார்த்து கடுப்பான ரசிகர்கள் 'என்னங்க இவரு மாத்தி மாத்தி பேசிட்டு இருக்கார்' என கலாய்க்கின்றனர்.