வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் புதிய அவதாரம் எடுத்துள்ள வனிதா விஜயகுமார் பொறுப்பான பல விஷயங்களில் பயணித்து வருகிறார். சினிமா ஆக்டிங், பிசினஸ் என அனைத்திலும் மிகவும் பாசிட்டாவாக செயல்பட்டு வருகிறார். இவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அந்த பேட்டியில் தனது மகள் சினிமா துறைக்கு வருவதை குறித்து பேசியுள்ள வனிதா, 'ஜோவிகாவை நான் நடிகையாக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. நானே சினிமாவை விட்டு வெளியேவந்தவள் தான். நான் எப்படி அவளை அதில் தள்ளுவேன். நடிக்க வேண்டும் என்பது அவளது விருப்பம். அதற்கு ஒரு தாயாக துணை நிற்பது என் கடமை என்று கூறியுள்ளார்'.
மேலும், திருமணம் குறித்த கேள்விக்கு பதில் கூறிய அவர், 'நான் எந்த ஒரு விஷயத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பதில்லை. கமாவில் தான் வாழ்கை தொடர்கிறது. புள்ளி என்றால் அது முடிவு. எனவே, மீண்டும் நான் கல்யாணமே பண்ண மாட்டேன் என்று சொல்லமாட்டேன்' என கூறியுள்ளார்.