நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது |
சின்னத்திரை இயக்குநர் திருச்செல்வம் இயக்கத்தில் அதிக எதிர்பார்ப்புகளுக்கிடையே ஒளிபரப்பாகி மக்கள் மனதிலும் தனியொரு இடத்தை பிடித்த தொடர் 'எதிர்நீச்சல்'. பாட்டி முதல் பாப்பா வரை ஒவ்வொரு கேரக்டரையும் செதுக்கி உருவாக்கப்பட்ட இந்த தொடர் அனைத்து தரப்பு மக்களிடத்திலும் நல்ல ரீச்சானது. ஆனால், தவிர்க்கமுடியாத சில காரணங்களால் எதிர்நீச்சல் தொடர் திடீரென முடித்து வைக்கப்பட்டது. இதனையடுத்து சீசன் 2விற்கான பணிகளும் அதுகுறித்த அறிவிப்பும் அப்போதே வெளியாகியிருந்த நிலையில், ஜனனியாக நடித்து வந்த மதுமிதா 'எதிர்நீச்சல் 2'வில் நடிக்க போவதில்லை என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது சீசன் 2விற்கான புரொமோ வெளியாகியுள்ளது. அதில், புதுபுது அர்த்தங்கள் உள்ளிட்ட சில தொடர்களின் மூலம் பிரபலமான வீஜே பார்வதி ஜனனி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது தெளிவாகிறது. புது ஜனனியை இப்போதே ரசிகர்களுக்கு பிடித்துவிட சீசன் 2வின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.