வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

சின்னத்திரை இயக்குநர் திருச்செல்வம் இயக்கத்தில் அதிக எதிர்பார்ப்புகளுக்கிடையே ஒளிபரப்பாகி மக்கள் மனதிலும் தனியொரு இடத்தை பிடித்த தொடர் 'எதிர்நீச்சல்'. பாட்டி முதல் பாப்பா வரை ஒவ்வொரு கேரக்டரையும் செதுக்கி உருவாக்கப்பட்ட இந்த தொடர் அனைத்து தரப்பு மக்களிடத்திலும் நல்ல ரீச்சானது. ஆனால், தவிர்க்கமுடியாத சில காரணங்களால் எதிர்நீச்சல் தொடர் திடீரென முடித்து வைக்கப்பட்டது. இதனையடுத்து சீசன் 2விற்கான பணிகளும் அதுகுறித்த அறிவிப்பும் அப்போதே வெளியாகியிருந்த நிலையில், ஜனனியாக நடித்து வந்த மதுமிதா 'எதிர்நீச்சல் 2'வில் நடிக்க போவதில்லை என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது சீசன் 2விற்கான புரொமோ வெளியாகியுள்ளது. அதில், புதுபுது அர்த்தங்கள் உள்ளிட்ட சில தொடர்களின் மூலம் பிரபலமான வீஜே பார்வதி ஜனனி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது தெளிவாகிறது. புது ஜனனியை இப்போதே ரசிகர்களுக்கு பிடித்துவிட சீசன் 2வின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.