தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

ஜீ தமிழில் கடந்த 2022ம் ஆண்டு முதல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் 'மாரி'. இதில், ஆஷிகா படுகோன் ஹீரோயினாக நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 800 எபிசோடுகளை தாண்டிவிட்ட இந்த தொடர், சமீபகாலமாக அரைத்த மாவையே அரைப்பது போல் சுமாராக ஓடி வருகிறது. இதற்கிடையில் சில தினங்களுக்கு முன் இந்த தொடரில் நடித்து வரும் ஹீரோயின் ஆஷிகா படுகோன் சீரியலை விட்டு விலகுவதாக செய்திகள் வெளியானது. ஆனால், அப்போது அதை மறுத்துவிட்ட ஆஷிகா தொடர்ந்து சில எபிசோடுகள் நடித்து வந்த நிலையில் தற்போது மாரி தொடரை விட்டு விலகுவதாக அவரே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், மாரி தொடரில் தனது பயணம் முடிந்துவிட்டதாகவும் இத்தனை நாட்கள் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தும் பதிவிட்டுள்ளார்.