ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
பாக்கியலெட்சுமி சீரியலிலிருந்து வெளியேறிதற்கான காரணத்தை ஏற்கனவே வெளியிட்டிருந்த ஜெனிபர். தற்போது மற்றொரு முக்கிய காரணத்தை வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியல் ஒளிப்பரப்பாகும் பாக்கியலெட்சுமி என்ற சீரியலில், ராதிகா எனும் முதன்மை கதாபாத்திரத்தில் ஜெனிபர் நடித்து வந்தார் . இந்த கதாபாத்திற்காக ஜெனிபருக்கென தனி ரசிகர் பட்டாளமும் இருந்தது. இந்நிலையில் ஜெனிபர் திடீரென விலகியது அவரது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இது குறித்து சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட ஜெனிபர், ராதிகா கதாபாத்திரம் வரவிருக்கும் எபிசோடுகளில் நெகடிவ் கேரக்டராக மாற இருக்கிறது. எனவே, அந்த கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிக்க விருப்பமில்லை என தெரிவத்திருந்தார். மேலும், தற்போது வெளியிட்டுள்ள மற்றொரு வீடியோவில் சீரியலிலிருந்து விலகியதற்கான முக்கிய காரணத்தை தெரிவித்துள்ளார்.
ஜெனிபர் இப்போது 6 மாத கர்ப்பமாக இருக்கிறார். தனது குடும்பத்தில் வரவிருக்கும் மற்றொரு உறுப்பினரை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்பதால் சீரியலில் நடிக்க முடியாமல் போனதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த செய்தியை அறிந்த அவரது ரசிகர்கள் ஜெனிபருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.