தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பாக்கியலெட்சுமி சீரியலிலிருந்து வெளியேறிதற்கான காரணத்தை ஏற்கனவே வெளியிட்டிருந்த ஜெனிபர். தற்போது மற்றொரு முக்கிய காரணத்தை வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியல் ஒளிப்பரப்பாகும் பாக்கியலெட்சுமி என்ற சீரியலில், ராதிகா எனும் முதன்மை கதாபாத்திரத்தில் ஜெனிபர் நடித்து வந்தார் . இந்த கதாபாத்திற்காக ஜெனிபருக்கென தனி ரசிகர் பட்டாளமும் இருந்தது. இந்நிலையில் ஜெனிபர் திடீரென விலகியது அவரது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இது குறித்து சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட ஜெனிபர், ராதிகா கதாபாத்திரம் வரவிருக்கும் எபிசோடுகளில் நெகடிவ் கேரக்டராக மாற இருக்கிறது. எனவே, அந்த கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிக்க விருப்பமில்லை என தெரிவத்திருந்தார். மேலும், தற்போது வெளியிட்டுள்ள மற்றொரு வீடியோவில் சீரியலிலிருந்து விலகியதற்கான முக்கிய காரணத்தை தெரிவித்துள்ளார்.
ஜெனிபர் இப்போது 6 மாத கர்ப்பமாக இருக்கிறார். தனது குடும்பத்தில் வரவிருக்கும் மற்றொரு உறுப்பினரை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்பதால் சீரியலில் நடிக்க முடியாமல் போனதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த செய்தியை அறிந்த அவரது ரசிகர்கள் ஜெனிபருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.