விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' | அறிமுகப் படத்திலேயே 1000 கோடி, அதிர்ஷ்ட ஹீரோயினாக மாறிய சாரா | 'ஏஐ' மூலம் யார் வேண்டுமானாலும் வயலின் இசைக்கலாம்: ஏ ஆர் ரஹ்மான் | போட்டி ரிலீஸ் : பிரபாஸின் பெருந்தன்மை, ரசிகர்கள் பாராட்டு |

விஜய் டிவி சீரியலான பாரதி கண்ணம்மா தொடரில் அகிலன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் அகிலன் புஷ்பராஜ் நடித்து வந்தார். சீரியலின் இரண்டாம் கதாநாயகனான அந்த கதாபாத்திலிருந்து அகிலன் தற்போது விலகியுள்ளார். அவர் விலகியதற்கான காரணம் என்னவென்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பமடைந்தனர். இந்நிலையில் அகிலன் சமீபத்தில் அளித்த பேட்டியில் பாரதி கண்ணம்மா தொடரிலிருந்து விலகியதற்கான காரணத்தை கூறியுள்ளார்.
அகிலன் புஷ்பராஜ் சின்னத்திரையில் அறிமுகமாயிருந்தாலும் அவரது ரசிகர்கள் அவரை திரைப்பட நடிகராகவே கற்பனை செய்து வந்தனர். அந்த கற்பனை உண்மையாகி சமீபத்தில் அவர் திரைத்துறையில் அறிமுகமானார். நடிகர் பிரபுதேவாவுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வந்த அகிலன், ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் தற்போது அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வருகின்றன. எனவே, பாரதி கண்ணம்மா சீரியலுக்கான சரியான கால்ஷீட்டை கொடுக்க இயலவில்லை. இதன் காரணமாகவே அவர் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக சுகேஷ் என்ற புது நடிகர் அகிலன் கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார்.
பாரதி கண்ணம்மா தொடங்கி 3 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், தனது கேரியரின் அடுத்தபடியை எட்டியிருக்கும் அகிலன், தொடரிலிருந்து தற்போது வெளியேறியுள்ளார். அகிலன் தற்போது பீட்சா 3, விஷாலுடன் இணைந்து ஒரு படம் மற்றும் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் இரண்டு படங்கள் என நான்கு படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இதை அறிந்த அவரது ரசிகர்கள் அகிலனுக்கு தங்களது பாராட்டு மழையை பொழிந்து வருகின்றனர்.