லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் விஜே தீபிகா நடித்து வந்தார். அவரது நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் திடீரென தீபிகா சீரியலை விட்டு விலகினார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட தீபிகா, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை விட்டு விலகியதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த பேட்டியில், எனக்கு மேக்கப் போடுவதால் அலர்ஜி ஏற்பட்டு முகத்தில் பருக்கள் அதிகமானது. இந்த பிரச்னை கடந்த 3 மாதங்களாகவே இருந்து வருகிறது. நானும் இதற்காக ட்ரீட்மெண்ட் எடுத்து வந்தேன். ஆனால் சரியாகவில்லை. தொலைக்காட்சி நிறுவனமும், பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினரும் எனக்கு மிகவும் சப்போர்டிவாக இருந்தனர். ஆனாலும், அவர்கள் கொடுத்த நேரத்திற்குள் எனக்கு ட்ரீட்மெண்ட் முடியாததால் நான் விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என கூறினார்.
தற்போது தீபிகா நடித்து வந்த ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் மற்றொரு விஜய் டிவி நடிகையான சாய் காயத்ரி நடித்து வருகிறார்.