சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
பாலிவுட் நடிகையான பிரக்யா ஜெய்ஸ்வால், தற்போது தெலுங்கு படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். தற்போது பாலகிருஷ்ணா ஜோடியாக அகந்தா படத்திலும் இந்தியில் சல்மான் கானுடன் அந்திம் படத்திலும் நடித்து வருகிறார். தமிழில் விரட்டு என்ற படத்தில் நடித்திருந்தார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் பிரக்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பின்பு அது குணமானது. தற்போது தனக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
ஏற்கெனவே எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்ததால் அது குணமானதும் இரண்டு தடுப்பூசியும் உரிய இடைவெளியில் போட்டுக் கொண்டேன். ஆனாலும் இப்போது எனக்கு கொரோனா அறிகுறிகள் தென்படுகிறது. இதனால் என்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
லேசான கொரோனா அறிகுறி வந்துள்ளதால் மருத்துவர்களின் ஆலோசனையின் கீழ் அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றுகிறேன். கடந்த 10 நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் தங்களை கவனித்துக் கொள்ள வேண்டும். அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன், என்கிறார்.