துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
இந்தியில் அமிதாப் பச்சனை வைத்து 'பா', 'சீனிகம்' ஷமிதாப் என வித்தியாசமான படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் தான் இயக்குனர் பால்கி. இந்தநிலையில் கார்வான், தி சோயா பேக்டர் என ஏற்கனவே இரண்டு இந்திப்படங்களில் நடித்துள்ள துல்கர் சல்மான் தற்போது இயக்குனர் பால்கியின் டைரக்சனில் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகர் சன்னி தியோல் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கடந்த மாதம் இந்தப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் துவங்கியது. இந்தநிலையில் இந்தப்படத்திற்கு 'சுப்' என டைட்டில் வைக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'ரிவெஞ்ச் ஆப் தி ஆர்டிஸ்ட்' என டேக்லைனுடன் வெளியாகியுள்ள படத்தின் டைட்டில் போஸ்டர் இதுவரை பால்கி இயக்கிய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, இருக்கை நுனியில் அமரவைக்கும் த்ரில்லர் படமாக இருக்கும் என சொல்லாமல் சொல்கிறது.