இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தெலுங்கில் மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்துள்ள காட்பாதர் படத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் அடுத்தபடியாக தனது படத்தில் சிரஞ் சீவியின் மகன் ராம்சரண் ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார் சல்மான்கான்.
இது குறித்து அவர் கூறுகையில், என்னுடைய அடுத்த படமான கிசிகா பாய் கிசுகி ஜான் என்ற படத்தில் ராம்சரண் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நடிக்க விரும்புகிறேன் என்று ராம் சரண் முதலில் சொன்னபோது இது ஒரு நகைச்சுவை என்றுதான் நினைத்தேன். ஆனால் மறுநாள் கேரவனுடன் வந்து படப்பிடிப்பிற்கு தயாராகி விட்டார். அவர் இந்த படத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ள சல்மான்கான், நானும் வெங்கடேஷ் டகுபதியும், ராம் சரணும் முக்கிய வேடங்களில் இப்படத்தில் நடிப்பதால் இது எனக்கு சிறப்பான படம் என்றும் தெரிவித்திருக்கிறார் சல்மான் கான்.