இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழில் மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் விக்ரம் வேதா. இந்த படம் தற்போது அதே பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு கடந்த 30 ஆம் தேதி திரைக்கு வந்துள்ளது. ஹிருத்திக் ரோஷன், சையூப் அலிகான் இணைந்து நடித்துள்ள இந்த படத்தையும் தமிழில் விக்ரம் வேதாவை இயக்கிய புஷ்கர் காயத்ரியே இயக்கி உள்ளார்கள். இந்த படம் கடந்த மூன்று தினங்களில் ரூ.40 கோடி வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் ஹிருத்திக் ரோஷன் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், விக்ரம் வேதா படத்தில் நடித்தது திருப்தியாக உள்ளது. ரசிகர்களும் இந்த படத்தை ஏற்றுக் கொண்டார்கள். இதையடுத்து பைட்டர் என்ற படத்தில் தீபிகா படுகோனேவுடன் இணைந்து நடிக்கிறேன். இந்த படமும் விக்ரம் வேதா படத்தைப் போலவே அழுத்தமான கதையில் உருவாகி வருகிறது என்று கூறியுள்ள ஹிருத்திக் ரோஷன், இனிமேல் இதுபோன்று அழுத்தமான கதைகள் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன். வலுவில்லாத கதைகளில் நடிக்க மாட்டேன். அதனால் இனிமேல் நான் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தக்கூடிய படங்களாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார் ஹிருத்திக் ரோஷன்.