தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பாலிவுட் கதாநாயகிகள் ஒரு பக்கம் முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாடிக்கொண்டிருக்கும் வேளையில், நடிகை கங்கனா ரனாவத் வரலாற்று கதைகளிலும் வித்தியாசமான சமூக கதைகள் மற்றும் கதாபாத்திரங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இன்னும் ஒருபடி மேலே போய் டைரக்ஷனிலும் இறங்கி மணிகர்ணிகா என்கிற படத்தை இயக்கி வெற்றியும் பெற்றார்.
தற்போது மறைந்த பிரதமர் இந்திராவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டு வரும் எமர்ஜென்சி என்கிற படத்தில் இந்திரா வேடத்தில் நடிப்பதுடன் இந்த படத்தையும் அவரே இயக்கி வருகிறார். இதில் அனுபம் கெர், மஹிமா சவுத்ரி, மிலிந்த் சோமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். கங்கனாவின் தலைவி படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கும் ஜிவி பிரகாஷ் தான் இசை அமைத்து வருகிறார். இந்தப்படத்தில் தற்போது ஒரு பாடல் காட்சி படமாகி வருகிறது.
இதுகுறித்து தற்போது கங்கனா கூறும்போது, “இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் அருமையான பாடல்களை தந்துள்ளார். இந்த படத்தில் 5 பாடல்கள் இருக்கின்றது. ஆனால் நிறைய பேர் இந்த எமர்ஜென்சி படத்திற்கு பாடல்களே தேவை இல்லை என்று கூறி வருகிறார்கள். அது ஏன் என்றுதான் எனக்கு புரியவில்லை. நான் பாடல்களை ரொம்பவே விரும்புபவள். இன்னும் சொல்லப்போனால் என்னுடைய படத்திற்கு பத்து நிமிட நீளமான பாடலுடன் கூடிய இன்டர்வல் பிளாக் இருந்தால் அதிகம் சந்தோஷப்படுவேன் என்று கூறியுள்ளார் கங்கனா.