ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கோல்கட்டாவில் உள்ள கர்தா பகுதியைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி ஷிவானிக்கு நேற்று முன்தினம் செல்போனில் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. போனில் வீடியோ காலில் பேசியவர் ஷாருக்கான். ஷிவானி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணத்தின் விழிப்பில் இருக்கிறார். தான் மரணமடைவதற்குள் ஷாருக்கானை ஒரு முறை பார்க்க வேண்டும் என்று உள்ளூர் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி ஷாருக்கானின் கவனத்துக்கு செல்ல, அவரே வீடியோகாலில் அழைத்து ஷிவானியுடன் பேசினார். அதோடு ஷிவானியின் மருத்துவ செலவையும் ஏற்பதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இது தொடர்பாக ஷிவானியின் மகள் ப்ரியா கூறும்போது, “என் தாயார் விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாக ஷாருக்கான் தெரிவித்தார். மேலும், அவர் என்னுடைய திருமணத்திற்கு வருவதாகவும், கோல்கட்டாவில் உள்ள வீட்டிற்கு நேரில் வருவதாகவும் கூறினார்". என்றார்.