துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
பத்மவாத், தேவதாஸ், பஜிரா மஸ்தானி போன்ற வித்தியாசமான படங்களை இயக்கியவர் பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி. கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த 'கங்குபாய் கத்வாதி' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதையடுத்து இவர் ஷாருக்கான் வைத்து 'இன்ஷா அல்லா' என்கிற படத்தை இயக்கவுள்ளதாக தகவல் பரவியதைத் தொடர்ந்து ஷாருக்கான் இந்த படத்தை விட்டு வெளியேறினார் என கூறப்பட்டது. இந்த நிலையில் திடீரென சஞ்சய் லீலா பன்சாலி தயாரித்து இயக்கும் புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் ரன்பீர் கபூர், அலியா பட், விக்கி கவுசல் ஆகியோர் இணைந்து நடிப்பதாக இன்று அறிவித்துள்ளனர். மேலும், இது 2025ம் ஆண்டில் திரைக்கு வருகிறது.