தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தற்போதெல்லாம் பணபுழக்கம் முடிந்து எல்லாமே ஆன்லைன் பரிவர்த்தனைகளாக மாறி வருகிறது. கடைகளில், பெட்ரோல் பங்குளில் உள்ளிட்ட எந்த இடத்திலும் ஸ்கேன் செய்து பணம் செலுத்தும்போது 'இத்தனை ரூபாய் பெறப்பட்டது' என்கிற குரல் ஒலிக்கும், பணத்தை பெறுபவர்கள் கவனத்திற்காக இந்த ஏற்பாடு. இதற்கான செயலிகள் ஏராளமாக வந்திருக்கிறது. அவைகளுக்கு இடையே வியாபார போட்டியும் இருக்கிறது. இவற்றை யுபிஐ செயலி என்று அழைக்கிறார்கள்.
இந்த நிலையில் ஒரு முன்னணி யுபிஐ செயலி ஒன்று பண பரிவர்த்தனைகள் பற்றி அறிவிக்க அமிதாப் பச்சனையும், தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபுவையும் அணுகியது. 'இவ்வளவு ரூபாய் பணம் பெறப்பட்டது' என்ற ஒரு வரியை பேச அமிதாப்பச்சனுக்கு 2 கோடியும், மகேஷ் பாபுவுக்கு 5 கோடியும் சம்பளம் வழங்கப்பட்டிருப்பதாக தவல்கள் வெளியாகி உள்ளது.




