இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பாலிவுட் முன்னணி நடிகையான கங்கனா ரணாவத் ஹிந்தி மட்டுமல்லாது தமிழ் திரையுலகில் நுழைந்து சில படங்களில் நடித்தார். தொடர்ந்து தனது படங்கள் குறித்த செய்திகளில் மட்டுமல்லாது அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை அவ்வப்போது கூறி அரசியல் அரங்கிலும் கூட பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். தேசிய கட்சியான பாஜக மீதும் பிரதமர் மோடி மீதும் மரியாதை கொண்ட கங்கனா தற்போது நடைபெற்று வரும் 2024க்கான லோக்சபா தேர்தலில் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள மாண்டி தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
முதல் முறையாக தேர்தலை சந்திக்கும் இவர் தனது தொகுதி முழுக்க பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்த சமயத்தில் அவரது பிரச்சாரங்களில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் அவர் பேசும் பேச்சு சோசியல் மீடியாவில் வைரல் ஆனது.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, “ராஜஸ்தான், மேற்கு வங்கம் மற்றும் டில்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு நான் பிரச்சாரத்திற்கு சென்றபோது எனக்கு கிடைத்த மரியாதையும் வரவேற்பையும் பார்க்கும்போது பிரமிப்பாக இருந்தது. திரையுலகில் இருந்து அமிதாப் பச்சனுக்கு பிறகு இப்படி ஒரு அன்பும் மரியாதையும் இந்த மக்களிடம் இன்னொருவருக்கு கிடைத்திருக்கிறது என்றால் அது எனக்கு மட்டும்தான் என என்னால் உறுதியாக சொல்ல முடியும்” என்று பெருமையுடன் கூறியுள்ளார் கங்கனா.