தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ஹிந்தி படங்களில் நடித்து வந்தபோது மும்பையில் குடியிருந்த பிரியங்கா சோப்ரா, 2018ல் நிக் ஜோனசை திருமணம் செய்து கொண்ட பிறகு லாஸ் ஏஞ்சல்ஸில் குடியேறினார். என்றாலும் மும்பையில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்திருந்தார். பின்னர் ஹாலிவுட் படங்களில் நடித்து வந்த பிரியங்கா சோப்ரா, தற்போது மகேஷ் பாபு நடிப்பில் ராஜமவுலி இயக்கி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டவர், ராஜமவுலி கால்ஷீட் கேட்கும் போதெல்லாம் கொடுத்து நடிக்க போகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதற்கு இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று கூறுகிறார்கள். இந்த நிலையில் தற்போது மும்பையில் உள்ள தன்னுடைய 13 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை விற்பனை செய்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா. இதுகுறித்த செய்திகள் பாலிவுட்டில் வெளியாகியுள்ளது.




