ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பான் மசாலா விளம்பர படங்களில் நடித்துள்ள பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கான், டைகர் ஷெராப் ஆகியோர் மீது ஜெய்ப்பூரை சேர்ந்த வக்கீல் யோகேந்திர சிங் பதியால் என்பவர் நுகர்வோர் குறை தீர்ப்பு கமிஷனில் புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில், ''நடிகர்கள் ஷாருக்கான், அஜய்தேவ்கான், டைகர் ஷெராப் ஆகியோர் நடித்துள்ள பான் மசாலா விளம்பர படங்களில், பான் மசாலாவில் குங்குமப்பூ கலப்பதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. சந்தையில் ஒரு கிலோ குங்குமப்பூ ரூ.4 லட்சத்துக்கு விற்கப்படுகிறது. ஆனால் பான் மசாலா விலை வெறும் 5 ரூபாய் மட்டும்தான். அப்படி இருக்கும்போது பான் மசாலாவில் எப்படி குங்குமப்பூவை கலப்பார்கள்.
நடிகர்களின் பான் மசாலா விளம்பரத்தை உண்மை என்று நம்பி சாதாரண மக்கள் பான் மசாலாவை உட்கொள்கிறார்கள். இது ஆரோக்கியத்துக்கு கேடு செய்கிறது. புற்றுநோய் போன்ற கொடிய வியாதிகளையும் உருவாக்குகிறது. எனவே பான் மசாலா விளம்பரங்களில் நடித்துள்ள நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து ஷாருக்கான், அஜய் தேவ்கான், டைகர் ஷெராப் ஆகிய மூவரும் வருகிற 19ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நுகர்வோர் கமிஷன் தலைவர் கைர்சிலாஸ் மீனா, உறுப்பினர் ஹேமலதா அகர்வால் ஆகியோர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.