தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

இந்தியாவின் 'முதல் மகாத்மா' என்று அழைக்கப்படும், ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்ரிபாய் பூலே ஆகியோரின் வாழ்க்கை வரலாறு 'பூலே' என்ற திரைப்படமாக தயாராகி உள்ளது. இந்த படம் கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருந்தது. இப்படத்தை இயக்குநர் ஆனந்த் மகாதேவன் இயக்கியிருந்தார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிராமண சமூகத்தினர் இத்திரைப்படத்தில் அவர்களை தவறாக சித்தரித்திருப்பதாக கூறி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்தப் படத்திற்கு தணிக்கை வாரியம் ‛யூ' சான்றிதழ் வழங்கியிருந்தது. பிறகு படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று தணிக்கை குழு, படக்குழுவினருக்கு உத்தரவிட்டிருந்தது. அதோடு சாதி குறித்தான உரையாடலைக் கொண்ட வாய்ஸ் ஓவரையும், சாதிய அமைப்பை விளக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் தணிக்கை வாரியம் கூறியிருக்கிறது. படத்தில் சில வசனங்களையும் மாற்றச் சொல்லியிருக்கிறார்கள்.
இதனால் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகவில்லை, இது குறித்து படத்தில் இயக்குனர் ஆனந்த் மகாதேவன் கூறும்போது, ''படத்தின் டிரைலர் பற்றி சில தவறான புரிதல்கள் இருக்கிறது. படத்தைப் பார்ப்பதில் எந்த தொந்தரவும் இருக்காது, என்றாலும் சில சந்தேகங்களை அகற்ற வேண்டியது இருக்கிறது." என்கிறார்.




