சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
கன்னட திரையுலகை சேர்ந்தவர் நடிகை ரன்யா ராவ். தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான 'வாகா' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் துபாயில் இருந்து பெங்களூருக்கு விமானம் மூலம் தங்கம் கடத்தலில் ஈடுபட்டார் என்கிற குற்றம் உறுதி செய்யப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட 12.56 கோடி மதிப்புள்ள 14.2 கிலோ தங்கத்தை பலமுறை தனது விமான பயணத்தின் மூலம் இவர் கடத்தியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர் இப்படி நகைகளை கடத்துவதற்கு கர்நாடக போலீஸ் உயர் அதிகாரியாக இருக்கும் தனது வளர்ப்பு தந்தையின் செல்வாக்கை பயன்படுத்திக் கொண்டார் என்றும் உறுதிப்படுத்தப்பட்டது. இவர் மீது ஏற்கனவே வருமானவரித்துறை, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியவை வழக்கு தொடர்ந்து உள்ளன. அதே சமயம் இவர் பலமுறை தனது ஜாமினுக்காக விண்ணப்பித்து அவை நிராகரிக்கப்பட்டன இந்த நிலையில் தற்போது மோசடி பண பரிமாற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக கூறி காபிபோசா சட்டமும் இவர் மீது பாய்ந்துள்ளது. இதனை தொடர்ந்து இன்னும் ஒரு வருடத்திற்கு அவருக்கு ஜாமின் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் அதுவரை அவர் சிறையில் தான் இருந்தாக வேண்டும் என்றும் தெரியவந்துள்ளது.