தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

முன்னாள் உலக அழகியும் பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது கணவர் அபிஷேக் பச்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது என்றும் இருவரும் விவாகரத்து பெற்று பிரிய போகிறார்கள் என்றும் குடும்ப நிகழ்வுகளில் கூட அவர்கள் இணைந்து பங்கேற்பது இல்லை என்பது போன்று செய்திகள் அவ்வப்போது வெளியாவது வழக்கம். அதன் பிறகு சோசியல் மீடியாவில் தாங்கள் ஒன்றாக இருப்பது போல ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அந்த சர்ச்சைக்கு ஐஸ்வர்யா ராய் தரப்பில் முற்றுப்புள்ளி வைப்பதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் அமிதாப்பச்சன் ஏற்பாடு செய்த கொண்டாட்ட நிகழ்வில் ஐஸ்வர்யா ராயும் அவரது மகள் ஆராத்யாவும் கலந்து கொள்ளவில்லை என்று தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதை தவிர்த்துள்ளதுடன் சுற்றுலா பயணமாக வெளியே கிளம்பி சென்று விட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இந்த விஷயமும் வழக்கம் போல அமிதாப்பச்சன் குடும்பத்திற்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் இடையே இப்போதும் கருத்து வேறுபாடு தொடர்கிறது என்கிற பரபரப்பை மீண்டும் துவங்கி வைத்து உள்ளது.




