தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

ஷாருக்கான் நடித்த 'ஜவான்' படத்தை அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் அட்லி. இந்த படம் தற்போதைக்கு 'ஏஏ-22 ஏ-6' என்று அழைக்கப்பட்டு வருகிறது. அதாவது அல்லு அர்ஜூனின் 22வது படம், அட்லியின் 6வது படம். இந்த படத்தில் தீபிகா படுகோனேவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் தீபிகாவின் கணவரான நடிகர் ரன்வீர் சிங் தான் அளித்த ஒரு பேட்டியில், இயக்குனர் அட்லியை மசாலாவின் ராஜா என்று பாராட்டியுள்ளார். அதோடு அட்லியின் தனித்துவமான பார்வை மற்றும் படைப்பாற்றல் மிகச் சிறப்பாக உள்ளது. தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் அவர் இயக்கி வரும் படத்தில் சிலிர்ப்பூட்டும் காட்சிகள் மற்றும் இந்திய சினிமாவில் இதுவரை கண்டிராத கதையுடன் ஒரு அற்புதமான அனுபவத்தை வழங்கப் போகிறது.
விஜய் நடிப்பில் அவர் இயக்கிய 'மெர்சல்' படத்திலிருந்தே நான் அட்லியின் ரசிகராகி விட்டேன். இந்திய சினிமாவில் மிகவும் உற்சாகமாக திறமையான ஒரு இயக்குனர் அட்லி. எதிர்காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற தான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார் ரன்வீர் சிங்.