இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
தமிழில் நயன்தாரா நடித்து வெளியான கோலமாவு கோகிலா படம், ஹிந்தியில் குட்லக் ஜெர்ரி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. ஆனந்த் எல்.ராய் தயாரிக்கிறார், சென்குப்தா இயக்குகிறார். இதில் நயன்தாரா நடித்த கோகிலா கேரக்டரில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் பஞ்சாப் மாநிலத்தில் நடந்து வருகிறது. பஞ்சாப் மாநில விவசாயிகள் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து தீவிர போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகள் அல்லல்படும் இந்த நேரத்தில் படப்பிடிப்பா என்று கூறி படப்பிடிப்பு தளத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் திரண்டு போராட்டம் நடத்தினார்கள். விவசாயிகளின் வலியை கண்டுகொள்ளாத பாலிவுட் நட்சதிரங்களுக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினார்கள். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
பின்னர் இயக்குனர் சென்குப்தா விவசாயிகளிடம் பேசினார். நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டவர்கள். எங்கள் ஆதரவை டுவிட்டர் வாயிலாக வெளிப்படுத்துகிறோம். மற்ற பாலிவுட் நட்சத்திரங்களிடம் உங்களுக்கு ஆதரவு திரட்டுவோம். என்று உறுதி அளித்தார். அதன் பின்னர் விவசாயிகள் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்திற்கு பிறகு ஜான்வி கபூர் தனது டுவிட்டரில் விவசாயிகளுக்கு ஆதரவான பதிவை வெளியிட்டார். அதில் "விவசாயம் தான் நம் நாட்டின் இதயம். நம் தேசத்திற்கு உணவளிக்கும் விவசாயிகளின் உணர்வை நான் மதிக்கிறேன். அவர்களுக்கு நன்மை தரும் முடிவுகள் ஏற்படும் என்று நம்புகிறேன்". என்று தெரிவித்துள்ளார்.