அரங்கம் அதிர, விசிலு பறக்க... வெளியானது கூலி : ரசிகர்கள் கொண்டாட்டம் | ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் |
பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் நாட்டு நடப்புகள் குறித்து துணிச்சலான கருத்துக்களை கூறி வருகிறவர். தனது டுவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவு செய்வார். ஏற்கெனவே 2 முறை டுவிட்டர் நிர்வாகம் கங்கனாவின் கணக்கை முடக்கி அவரை எச்சரித்துள்ளது. ஆனால் அதைப்பற்றியெல்லாம் கங்கனா கவலைப்படவில்லை. இப்போது 3வது முறையாக முடக்கப்பட்டு எச்சரித்துள்ளது.
சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான தாண்டவ் வெப் சீரிஸ் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக அந்த சீரிசை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக கங்கனா தனது கருத்தை டுவிட்டரில பதிவு செய்தார். இந்த கருத்து இரு மத்தினரிடையே வன்முறையை தூண்டும் விதமாக இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் அந்த பதிவை நீக்கினார் கங்கனா.
இந்த நிலையில் கங்கனாவின் டுவிட்டர் கணக்கை தற்காலிமாக முடக்கி வைத்த டுவிட்டர் நிர்வாகம், ''டுவிட்டர் விதிமுறைகளை மீறும் எந்த ஒரு கணக்கின் மீதும் நடவடிக்கை எடுக்க எங்களுக்கு உரிமை இருக்கிறது. டுவிட்டரில் மக்கள் தங்கள் கருத்துக்களை சுந்திரமா வெளியிடுவதை நாங்கள் வரவேற்கிறோம். என்றாலும் எங்கள் கொள்கைபடி எந் ஒரு தனி நபரையோ, அல்லது ஒரு சமூக மக்களையோ குறிவைத்து தாக்குவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்'' என்று கூறியுள்ளது.