ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
சினிமாவில் வில்லன் நடிகராக அறியப்பட்டாலும் நிஜத்தில் ஹீரோவாக கொண்டாடப்படுகிறார் சோனுசூட். காரணம் கொரோனா காலத்தில் அவர் ஆற்றிய பணிகள். கொரோனா முதல் அலையின்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பஸ், ரயில், விமானத்தில் ஏற்றி அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். இரண்டாவது அலையில் ஆக்சிஜன் வங்கிகளை ஏற்படுத்தி பணியாற்றி வருகிறார். இதுதவிர ஏராளமான உதவிகளை அவர் செய்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் திடீரென முட்டை, ரொட்டி விற்கும் வியாபாரத்தில் இறங்கி விட்டார். தனது வீட்டில் தினமும் சைக்கிளில் முட்டை மற்றும் பிரட்டுகளை எடுத்துக் கொண்டு தெருத் தெருவாக சென்று விற்று வருகிறார். மற்ற பணிகள் எல்லாம் சரி. இது விளம்பரத்துக்காக செய்கிறார் என்று சிலர் நினைக்கலாம்.
அவர் தரும் விளக்கம் இது: இந்த வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்தை கொரோனா பணிகளுக்கு பயன்படுத்த இருக்கிறேன். அதைவிட முக்கியமாக இந்த கொரோனா காலத்தில் பலரும் வேலை இழந்திருக்கிறார்கள். அவர்கள் இதுபோன்ற சிறுசிறு வியாபாரத்தில் ஈடுபட்டு தங்கள் வாழ்க்கை பிரச்சினையை தீர்க்க முன்வர வேண்டும். அதற்கு அவர்களுக்கு தயக்கமோ, வெட்கமோ இருக்ககூடாது என்பதற்காக நானே முன்மாதிரியாக இருந்து செய்து காட்டுகிறேன். என்கிறார் சோனுசூட்.