அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் |
பாலிவுட் நடிகர் சல்மான்கான் ஏற்கனவே கார் விபத்து வழக்கு, மான்கறி வழக்கு என பல சர்ச்சைகளில் சிக்கியவர். இந்தநிலையில் மோசடி வழக்கு ஒன்றிற்காக சல்மான்கான் மற்றும் அவரது தங்கை உள்ளிட்ட ஏழு பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது சண்டிகர் போலீஸ். சண்டிகரை சேர்ந்த அருண் குப்தா என்பவர் அளித்த புகாரின் பேரில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
விஷயம் இதுதான்.. சல்மான்கான் 'பீயிங் ஹ்யூமன்' என்கிற அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார் சில மாதங்களுக்கு முன்பு, இந்த அறக்கட்டளையை சேர்ந்த இருவர் அருண் குப்தாவை தொடர்பு கொண்டு, இந்த அறக்கட்டளையின் கிளை ஒன்றை ஆரம்பித்து அதன்மூலம் புதிய வியாபாரம் துவங்குங்கள் என்றும் அதை சல்மான்கான் வந்து திறந்து வைப்பார் என்றும் கூறினார்களாம்.
அவர்கள் பேச்சை நம்பி பீயிங் ஹ்யூமன் ஜுவல்லரி என்கிற பெயரில் கடையை துவங்குவதற்காக சுமார் மூன்று கோடி ரூபாய் வரை முதலீடு செய்தாராம் அருண் குப்தா.. ஆனால் அவர்கள் சொன்னபடி சல்மான்கான் வந்து கடையை திறந்து வைக்கவில்லை, அதனால் எனக்கு நஷ்டமானது என அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார் அருண் குப்தா.