மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஒரே பாகமாக ரீ ரிலீஸ் ஆகும் பாகுபலி | படு கவர்ச்சிக்கு மாறப்போகும் ராஷ்மிகா | தக் லைப் விமர்சனம் : திரிஷா அப்செட் | தமிழர்கள் ரசனை குறைந்தவர்களா? இயக்குனர் ஞானராஜசேகரன் | அன்னை இல்லத்தில் டும்டும் : ராம்குமார் மகன் தர்ஷனுக்கு திருமணம் | திருமண வேலைகளுக்கு இடையே டப்பிங்கை முடித்த நாகார்ஜுனா |
பாலிவுட் நடிகர் சல்மான்கான் ஏற்கனவே கார் விபத்து வழக்கு, மான்கறி வழக்கு என பல சர்ச்சைகளில் சிக்கியவர். இந்தநிலையில் மோசடி வழக்கு ஒன்றிற்காக சல்மான்கான் மற்றும் அவரது தங்கை உள்ளிட்ட ஏழு பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது சண்டிகர் போலீஸ். சண்டிகரை சேர்ந்த அருண் குப்தா என்பவர் அளித்த புகாரின் பேரில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
விஷயம் இதுதான்.. சல்மான்கான் 'பீயிங் ஹ்யூமன்' என்கிற அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார் சில மாதங்களுக்கு முன்பு, இந்த அறக்கட்டளையை சேர்ந்த இருவர் அருண் குப்தாவை தொடர்பு கொண்டு, இந்த அறக்கட்டளையின் கிளை ஒன்றை ஆரம்பித்து அதன்மூலம் புதிய வியாபாரம் துவங்குங்கள் என்றும் அதை சல்மான்கான் வந்து திறந்து வைப்பார் என்றும் கூறினார்களாம்.
அவர்கள் பேச்சை நம்பி பீயிங் ஹ்யூமன் ஜுவல்லரி என்கிற பெயரில் கடையை துவங்குவதற்காக சுமார் மூன்று கோடி ரூபாய் வரை முதலீடு செய்தாராம் அருண் குப்தா.. ஆனால் அவர்கள் சொன்னபடி சல்மான்கான் வந்து கடையை திறந்து வைக்கவில்லை, அதனால் எனக்கு நஷ்டமானது என அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார் அருண் குப்தா.