வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

ராஜா ராணி படத்தில் இயக்குனரான அட்லீ, அதையடுத்து விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கினார். இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஷாரூக்கானை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கப்போவதாக சொல்லி, கடந்த பல மாதங்களாகவே ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தார் அட்லீ. இந்நிலையில் இன்று முதல் அப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிப்பதாக கூறப்படும் நிலையில் கமலின் விக்ரம் படம் போன்று இப்படத்தின் அறிமுக டீசரை இம்மாதம் 15-ந்தேதி வெளியிட அட்லீ திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.