இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மலையாள நடிகர் திலீப் ஏற்கனவே கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி 3 மாத சிறைவாசம் அனுபவித்து, அதன்பின் ஜாமினில் வெளியே வந்தார். கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஓடிவிட்ட நிலையில் அவரது நண்பராக இருந்து தற்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ள இயக்குனர் பாலச்சந்திர குமார் என்பவர், நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வீடியோ கிளிப்புகளை திலீப் தனது மொபைல் போனில் பார்த்தார் என்றும், அந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரிகளை கொலை செய்ய திட்டமிட்டிருந்தார் என்றும் போலீசில் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் திலீப் மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு கடந்த மாதம் விண்ணப்பித்திருந்தார் திலீப். கிட்டத்தட்ட 6 முறைக்கு மேல் தள்ளிவைக்கப்பட்ட இந்த மனுவின் மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் கோபிநாத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதற்கு முன்னதாக திலீப்பிடம் மூன்று நாட்கள் கிரைம் பிராஞ்ச் போலீசார் விசாரித்து தாக்கல் செய்த அறிக்கையை பரிசீலித்த நீதிபதி, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் திலீப்பிற்கு முன்ஜாமீன் வழங்குவதாக உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து திலீப் தரப்பு வட்டாரம் மகிழ்ச்சி அடைந்துள்ளது.