துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தெலுங்கு திரையுலகை பொறுத்தவரை இங்கு விஜய், அஜித் போலத்தான் மகேஷ்பாபுவும், பவன் கல்யாணும்.. அங்கேயும் இருவரது ரசிகர்கள் வழக்கம்போல முரண்பட்டு கிடந்தாலும் அவர்கள் இருவரும் நட்பு பாராட்டவே செய்கின்றனர். குறிப்பாக பவன் கல்யானை வெளிப்படையாக பாராட்ட தயக்கம் காட்ட மாட்டார் மகேஷ்பாபு. அந்தவகையில் தற்போது பவன் கல்யாண் மற்றும் ராணா நடிப்பில் வெளியாகியுள்ள பீம்லா நாயக் படம் பார்த்துவிட்டு பவன் கல்யாணின் நடிப்பை புகழ்ந்து தள்ளியுள்ளார் மகேஷ்பாபு.
இதுபற்றி அவர் கூறும்போது, “பவன் கல்யாண் எரியும் நெருப்பு போல இருக்கிறார். என்ன ஒரு நடிப்பு..? பரபரப்பான டேனியல் சேகராக ராணாவின் திரை தோற்றம் வியக்க வைக்கிறது. சமீப காலத்தில் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸின் எழுத்தில் உருவான படங்களில் இது ரொம்பவே சிறப்பானது. எனது லென்ஸ்மேனாக இருக்கும் ரவி கே சந்திரன் மற்றும் தமனின் இசை, இயக்குனர் சாஹர் சந்திரா என மொத்த குழுவுக்கும் எனது பாராட்டுக்கள்” என கூறியுள்ளார் மகேஷ்பாபு.