'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... | மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா |

மலையாள திரையுலகில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வு என்றால் நடிகரும் தயாரிப்பாளருமான விஜய்பாபு துணை நடிகர் ஒருவரின் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானதும் அதிலிருந்து தப்பிப்பதற்காக வெளிநாட்டிற்கு சென்று ஒரு மாதம் தலைமறைவாக இருந்ததும் தான். துணை நடிகை ஒருவர், நடிகர் விஜய்பாபு தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்தார் என்றும் அடித்து துன்புறுத்தினார் என்றும் புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து வெளிநாடு தப்பி சென்ற விஜய்பாபு ஜார்ஜியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் தலைமறைவாக இருந்து வந்தார். மேலும் அங்கிருந்தபடியே முன் ஜாமீனுக்கும் விண்ணப்பித்தார். ஆனால் அவர் நேரில் ஆஜரானார் மட்டுமே முன்ஜாமீன் மனு மீது விசாரணை நடத்த முடியும் என நீதிமன்றம் கறாராக கூறிவிட்டது.
இந்த நிலையில் கேரளா திரும்பிய நடிகர் விஜய்பாபுவிடம் போலீசார் தொடர்ந்து 9 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். விஜய்பாபு ஏற்கனவே கூறியது போல, இது தனக்கும் சம்பந்தப்பட்ட நடிகைக்கும் இடையே புரிதல் உணர்வோடு, சம்பந்தப்பட்ட நடிகையின் முழு சம்மதத்துடன் நடந்த விஷயம். தான் புதிதாக தயாரிக்கும் படத்தில் அவருக்கு வாய்ப்பு தரவில்லை என்கிற காரணத்தினால் என் மீது இதுபோன்ற ஒரு அவதூறு குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார் என்று அந்த விசாரணையில் கூறியுள்ளார் விஜயபாபு.
வியாழன் வரை விஜய்பாபுவை கைது செய்ய தடை விதித்து ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதால் இதுவரை போலீசார் அவரை கைது செய்யவில்லை. அவரது முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை அமையும் என்று தெரிகிறது.