தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

மலையாளத்தில் வளர்ந்து வந்த இளம் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஜய்பாபு. இவர் இளம் நடிகை ஒருவரை சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக அந்த நடிகை போலீசில் புகார் செய்ததை அடுத்து விஜய்பாபு மீது பலாத்கார வழக்கு தொரடப்பட்டது. இதையடுத்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடி தலைமறைவான விஜய்பாபு போலீசாரின் கடுமையான நடவடிக்கைகளுக்கு பிறகு இப்போது கேரளா திரும்பி உள்ளார்.
இந்த நிலையில் போலீசார் என்னை கைது செய்யக்கூடாது. போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று கூறி கேரள உயர்நீதி மன்றத்தில் விஜய்பாபு முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இதனால் 2 நாட்கள் கைது செய்யக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து விஜய்பாபு போலீசார் முன் ஆஜரானார். அவரிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்றும் விசாரணை நடந்தது.
இந்த நிலையில் போலீஸ் விசாரணைக்கு தான் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாகவும் தனது கைது தடையை நீடிக்க வேண்டும் என்றும் விஜய்பாபு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் போலீசாரும் விஜய்பாபுவிடம் விசாரணை முடிக்க கூடுதல் அவகாசம் கேட்டிருந்தனர். இரு மனுக்களையும் ஏற்ற நீதிமன்றம் விஜய்பாபுவை வருகிற 7ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்தது. அதோடு விஜய்பாபுவும் வழக்கு தொடர்பான சாட்சிகளையோ, வழக்கு தொடுத்தவரையோ சந்திக்கவும் தடை விதித்தது.