மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் |
தமிழ், தெலுங்கு மட்டுமல்லாது ஹிந்தியிலும் மாறிமாறி பிசியாக நடித்து வருகிறார் விஜய்சேதுபதி.. அதேசமயம் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் ஜெயராம் நடித்த மார்க்கோனி மத்தாய் என்கிற படத்தின் மூலம் மலையாள திரையுலகில் நுழைந்த அவர், அதையடுத்து மலையாளத்தில் தனது இரண்டாவது படமாக 19(1)(a) என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்து வி.எஸ் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக நித்யா மேனன் நடித்துள்ளார். 96 புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
இந்தப்படத்தில் விஜய்சேதுபதி தமிழ்நாட்டை சேர்ந்த அதேசமயம் சூழ்நிலை காரணமாக கேரளாவில் குடியிருக்கும் எழுத்தளார் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குறிப்பாக இந்தப்படத்தின் டைட்டிலுக்கேற்றபடி கருத்து சுதந்திரம் பற்றி இந்தப்படம் பேசுகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த வருடமே முடிவடைந்துவிட்ட நிலையில் சமீபத்தில் தான் ரிலீசுக்கான பணிகள் துவங்கப்பட்டன. இந்தநிலையில் இந்தப்படம் விரைவில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் விரைவில் நேரடியாக வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.