இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கடந்த இரண்டு தினங்களாக மகேஷ்பாபு புதிதாக தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்த படத்தை திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்குகிறார். இந்த நிலையில் தெலங்கானாவில் உள்ள கைத்தறி நெசவு மேற்கொள்ளும் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாகவும் அவர்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும் விதமாகவும் மகேஷ்பாபு தன் மனைவியுடன் சேர்ந்து ஆதரவுக்கரம் நீட்டி உள்ளார்.
தெலுங்கானாவில் உள்ள நாராயணன்பேட் கிராமத்தைச் சேர்ந்த பெண் நெசவாளர்கள் தங்கள் தயாரிப்புகளை ஆன்லைன் மூலம் விற்பதற்காக ஆருண்யா என்கிற ஆன்லைன் விற்பனை தளத்தை துவங்கியுள்ளனர். மகேஷ்பாபு இது பற்றி தனது சோசியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டு, கிராமத்து பெண்களின் திறமையை, குறிப்பாக நெசவாளர்கள் மற்றும் கலைஞர்களின் திறமையையும் உழைப்பையும் வெளிக்கொண்டு வந்து சுயதொழில் மூலமாக அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் இந்த தளத்திற்கு என்னுடைய ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல தனது மனைவி நம்ரதா சிரோத்கருடன் சம்பந்தப்பட்ட நெசவாளர் பெண்களையும் இந்த விற்பனை தளத்தின் பொறுப்பாளர்களையும் நேரிலேயே சந்தித்தும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.