சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் |
இந்த வருட துவக்கத்திலேயே தெலுங்கு திரையுலகில் வெளியான வீர சிம்ஹா ரெட்டி என்கிற படத்தின் மூலம் தனது வெற்றியை அழுத்தமாக பதிய வைத்து விட்டார் நடிகர் பாலகிருஷ்ணா. இந்த படத்தை கோபிசந்த் மாலினேனி என்பவர் இயக்கி இருந்தார். இதையடுத்து பாலகிருஷ்ணா நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத அவரது 108 ஆவது படத்தை இயக்குனர் அனில் ரவிபுடி என்பவர் இயக்குகிறார்.
ஏற்கனவே விவேக் ஓபராய், சைப் அலிகான் என தொடர்ந்து பாலிவுட்டில் இருந்து பிரபலமான நடிகர்களை அழைத்து வந்து தென்னிந்திய படங்களில் வில்லனாக்கும் வரிசையில் இந்த படத்தின் மூலம் பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால் வில்லனாக அறிமுகமாகிறார்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அது மட்டுமல்ல, நடிகர் அர்ஜுன் ராம்பாலும் தன் பங்கிற்கு, முதன்முதலாக தெலுங்கில் தான் அடி எடுத்து வைக்கும் செய்தியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.