தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

மலையாள திரையுலகில் இந்த வருட துவக்கத்திலிருந்து கிட்டத்தட்ட ஐந்து படங்கள் 50 கோடி வசூல் கிளப்பில் இணைந்து ஆச்சரியப்படுத்தின. இந்த நிலையில் இந்த வருட இறுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மோகன்லால்-இயக்குனர் ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியான 'நேர்' திரைப்படமும் தற்போது 50 கோடி கிளப்பில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. ஏழு நாட்களில் உலக அளவில் 50 கோடி வசூலித்துள்ளது இந்தப்படம். இது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள மோகன்லால் ரசிகர்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் மலையாள திரையுலகில் திரிஷ்யம் படம் மூலமாக முதன்முதலாக 50 கோடி வசூல் கிளப்பை உருவாக்கியதே மோகன்லாலும் இயக்குனர் ஜீத்து ஜோசப்பும் தான். முழுக்க முழுக்க நீதிமன்ற வழக்காடுதலை மையப்படுத்தி, அதே சமயம் இரண்டு மணி நேரம் விறுவிறுப்பான கதை அம்சத்துடன் உருவாகியுள்ள 'நேர்' திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களின் வரவேற்பை பெற துவங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் மோகன்லாலும் பிரியாமணியும் எதிரெதிராக வாதாடும் வழக்கறிஞர்களாக நடித்துள்ளனர்.